தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பாராட்டி ஊக்கத்தொகை அளித்து வருவது வழக்கம். அந்த வகையில் மூன்றாவது ஆண்டாக இம்முறையும் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்ளுக்கான பாராட்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய த.வெ.க தலைவர் விஜய், மாணவர்களே நீங்கள் விரும்புகிற படிப்பை சந்தோஷத்துடன் படியுங்கள். படிப்பில் மன அழுத்தம் தேவையே இல்லை. நீட் மட்டும் தான் உலகமா? நீட் தேர்வையும் தாண்டி இந்த உலகம் மிகப்பெரியது.அதில் நீங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. எனவே, அதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள் என்று பேசினார்

Comments are closed.