Rock Fort Times
Online News

ரூ.2 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்களை வெட்டி விற்றதாக புகார்: திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் மீது வழக்கு பதிவு…!

திருச்சி, ராம்ஜி நகர் அருகே உள்ள சன்னாசிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனக்கு சொந்தமான 1.26 செண்ட் நிலத்தில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. அதில், 300-க்கும் மேற்பட்ட கருவேல மரங்களை மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் விசாரித்தபோது தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், மாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் என்பவர் தனது ஆட்களுடன் வந்து கருவேல மரங்களை வெட்டி அவற்றை விற்பனை செய்தது தெரிய வந்தது. வெட்டப்பட்ட சீமை கருவேல மரங்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இது குறித்து பாரதிதாசன் மற்றும் அவர்களது ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த உதவி ஆய்வாளர் பி.கோபிநாத் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ஆறுமுகத்திற்கு சொந்தமான நிலத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி விற்றது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் பாரதிதாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்