Rock Fort Times
Online News

திருச்சியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் காணப்பட்ட மனுதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகை…! * முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் வழங்கினார்…!

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர், முன்னிலையில் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன், தலைமை குற்றவியல் நீதிபதி மீனாசந்திரா மற்றும் சார்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவர்கள், வழக்கறிஞர் சங்க தலைவர் கணேசன், செயலாளர் சி.முத்துமாரி, குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், துணைத் தலைவர் வடிவேல்சாமி, தலைமை அரசு வழக்கறிஞர் சவரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சமரச தீர்வு மைய செயலாளர், சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பிரபு செய்திருந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்