திருச்சியில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில், திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வரும் திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தமிழ் (52) என்பவர் பாலியல் ரீதியாக அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வருவதால் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி பேராசிரியர் தமிழை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Comments are closed.