Rock Fort Times
Online News

திருச்சியில் உள்ள டாஸ்மாக் பாரில் பிணமாக கிடந்த கலெக்க்ஷன் ஏஜென்ட்…!

திருச்சி ஏர்போர்ட் சந்தோஷ் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது38). இவர் தனியார் நிறுவனத்தில் கடன் வசூலிப்பாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது, அதனால் குடிப்பழக்கத்தில் இருந்து மீள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் அவரால் மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. இவர் திருச்சி ஏர்போர்ட் தென்றல் நகரில் உள்ள டாஸ்மாக்கிற்கு மது அருந்த சென்றார். அங்குள்ள பாரில் அமர்ந்து அவர் மது அருந்தி உள்ளார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மனைவி சரண்யா அங்கு சென்று பார்த்த போது, கண்ணன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உறவினர்கள் உதவியுடன் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்