திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதி படியூரில் நடைபெறும் திமுக மண்டல அளவிலான வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். முன்னதாக அவர், அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் சாலை மார்க்கமாக காங்கேயம் புறப்படுகிறார். இதனிடையே விமான நிலையத்திலிருந்து கார் மூலம் சென்ற முதலமைச்சர் விளாங்குறிச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளின்நிலை குறித்தும், பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உடனிருந்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.