Rock Fort Times
Online News

மத்திய பஸ் நிலையத்தில் இரு தரப்பினர் மோதல் 11 திருநங்கைகள் மீது வழக்கு

trichycentral busstand

திருச்சி அரியமங்கலம் உக்கடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கீர்த்தனா ( வயது 20). இவர் நண்பர்களுடன் திருச்சி மத்திய பஸ் நிலையம் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த திருநங்கைகளுக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக கீர்த்தனா கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் போலீசார் 11 திருநங்கைகள் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்