திருச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை( செப்.17) மாலை அணிவிப்பு… *முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!
தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இதனை முன்னிட்டு அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Comments are closed.