முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ( 18.06.2023 ) இரவு விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் கார் மூலம் திருவாரூர் சென்று ஓய்வு எடுக்கிறார். மறுநாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் 20-ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார். விழா முடிந்ததும் இரவு திருவாரூரிலிருந்து ரயில் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். மேற்கண்ட தகவலை தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.