தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.17) திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதற்கான பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செப்.16 முதல் செப்.17 ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இருநாட்கள் திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.