சென்னை அமைந்தகரை, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, அமைந்தகரை பி.எச்.ரோடு, கதவு எண்.707.ல் சுமார் 1800 சதுரடி நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, ஆக்கிரமிப்பினை சென்னை மண்டலம் 2ன் இணை ஆணையரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பினை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று ( 16.10.2023 ) சென்னை உதவி ஆணையா் முன்னிலையில் ஆக்கிரமிப்பு சொத்தினை கோவில் நிா்வாக்த்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு சொத்தின் மதிப்பு ரூ. 2.70 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.