திருச்சி- ஈரோடு மற்றும் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு – கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே மேம்பாலங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 30-ந் தேதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் சில ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி- ஈரோடு பயணிகள் ரெயிலானது (வண்டி எண்: 56809) நாளை மறுநாள் மற்றும் வருகிற 30-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த ரெயிலானது கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். தொடர்ந்து கரூர் – ஈரோடு இடையிலான சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண் : 16845) மேற்கண்ட நாட்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். தொடர்ந்து இந்த ரெயிலின் ஈரோடு-கரூர் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண் : 16845) மேற்கண்ட நாட்களில் ஈரோட்டில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். தொடர்ந்து இந்த ரெயிலின் ஈரோடு-கரூர் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று மறுமார்க்கத்தில் செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்: 16846) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 30-ந் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலானது கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். தொடர்ந்து கரூர் – ஈரோடு இடையிலான சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.