ஈரோடு -கரூர் பிரிவில் உள்ள பாசூர் ஊஞ்சலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக மார்ச் 11, 13 , 15 ஆகிய மூன்று நாட்கள் கீழ்கண்டவாறு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், மார்ச் 11, 13 , 15 ஆகிய தேதிகளில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது.
* செங்கோட்டையிலிருந்து காலை 5.10 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண்.16846 செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ், மார்ச் 11, 13, 15 ஆகிய நாட்களில் செங்கோட்டையிலிருந்து கரூர் வரை மட்டுமே இயங்கும். அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது.
* ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில் எண்.16845 ஈரோடு -செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மார்ச் 11, 13 , 15 ஆகிய தேதிகளில் கரூரில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் ஈரோட்டில் இருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயக்கப்படும். இத்தகவலை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ADVERTISEMENT…👇
Comments are closed.