Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரெயில் சேவைகளில் மாற்றம்…!

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் செங்கோட்டை -மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் அக்.16, 17, 18 மற்றும் 22-ந் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். நாகர்கோவில் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளது. இதேபோல, கன்னியாகுமரி -ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இதே வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. குருவாயூர் -சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 15, 16, 17 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். சென்னை எழும்பூர்- மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி சென்னையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு வழியில் ஏதாவது ஒரு இடத்தில் 40 நிமிட நேரம் நிறுத்தப்படும். இதேபோல, 28-ந்தேதி 30 நிமிட நேரம் நிறுத்தப்படும். சென்னை எழும்பூர்- தூத்துக்குடி சிறப்பு விரைவு ரெயில் சென்னையில் இருந்து வருகிற 28-ந்தேதி மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு வழியில் ஏதாவது ஒரு இடத்தில் 110 நிமிட நேரம் நிறுத்தப்படும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்ககள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்