திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட் நெய்குப்பை பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 40). இவர் தனியார் மருத்துவமனை கேண்டினில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை முடிந்து, நேற்று ( 16.06.2023 ) இரவு சமயபுரம் அருகே உள்ள கூத்தூர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி பகுதியை சேர்ந்த விஜயலெட்சுமி என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறி 2 பெண்களும் இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்தனர். இச்சம்பவம் குறித்து நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.