Rock Fort Times
Online News

மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் ஆய்வு – புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் மற்றும் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம் இணைந்து, மக்கள் தொகை குறித்த தகவல்களை மிக நுண்ணிய அளவில் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கென மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்களை உயர்தொழில் நுட்ப ஆய்வு கணிணி மூலம் ஆய்வு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், திருச்சி என்.ஐ.டி வளாகத்தில், நேற்று ( 11.05.2023 ) கையெழுத்தானது. இதில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக, இயக்குநர் சஜன்சிங் ஆர். சவான், இணை இயக்குநர் வி.கே. சுபா மற்றும் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக இயக்குநர் ஜி. அகிலா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில் ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை முன்னவர் சங்கரநாரயணன், கணிப்பொறி உதவிக் குழுமத்தின் தலைவர் சிவக்குமரன், ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை துணை முன்னவர் ஆனந்த் , திட்ட தொடர்பு அலுவலர் பைசல் அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்