நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். ஒட்டுமொத்தமாக 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று பிற்பகல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 10,12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற துணைத்தேர்வை அறிமுகப்படுத்துவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஏதுவாக துணைத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. 10ம் வகுப்பில் 2 பாடங்களிலும், 12ம் வகுப்பில் ஒரு பாடத்திலும் அதிக மதிப்பெண் எடுக்க துணைத்தேர்வு எழுதலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.