Rock Fort Times
Online News

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ₹24 லட்சம் மோசடி செய்த கணவன்- மனைவி மீது வழக்கு…!

திருச்சி தெற்கு தாராநல்லூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 37). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரிடம், அறிமுகமான லால்குடி நன்னிமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அவரது மனைவி பிரதீபா ஆகியோர் பங்கு வர்த்தகத்தில் ₹ 25 லட்சம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் வட்டியுடன் சேர்த்து ₹50 லட்சம் திரும்பத் தருவதாக உறுதி அளித்தனர். இதை நம்பிய நந்தகுமார் ₹25 லட்சத்தை கடந்த 2021 ஜூன் 20 ம் தேதி அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து தம்பதியிடம் கேட்டபோது,
₹ ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 41 தொகையினை கூகுள் பே மூலமாக கொடுத்தனர். அதன் பின்னர் கடந்த 2023 ல் 2 காசோலைகளை வழங்கினர்.
ஆனால், அந்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்துவிட்டது. இதுகுறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசில் நந்தகுமார் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, கணவன்- மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்