ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் இன்பத் தமிழன். இவர் அதிமுக அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் மீது சார்பதிவாளர் முத்துசாமி கடந்த 16-ம் தேதி நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தன்னை செல்போனில் தொடர்பு கொண்ட இன்பத்தமிழன், தான் ஒருநபரை அனுப்பி வைப்பதாகவும், அவரிடம் ரூ.10 லட்சம் கொடுத்து அனுப்பவேண்டும் என்று கூறியதாகவும், இதுதொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜிடம் தெரிவித்தேன். அவர், இன்பத்தமிழனிடம் பேசி இருக்கிறார். அதற்கு முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன், ஏற்கனவே சார் பதிவாளர் முத்துசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட துறைகளிடம் புகார் அளித்து இருப்பதாகவும், அந்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று மான்ராஜிடம் தெரிவித்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்த போலீசார் அரசு அதிகாரியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக இன்பத்தமிழன் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.