Rock Fort Times
Online News

திருச்சியில் ரயில் முன் பாய்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை…!

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள மொராய்ஸ் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (36). இவரது மனைவி காயத்ரி. இவர் பெரம்பலூரை சேர்ந்தவர். இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிருஷ்ணதேவ் என்ற மகன் உள்ளான். கோகுலகிருஷ்ணன் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக கேண்டினில் பணியாற்றி வந்தார். தற்போது அந்த கேண்டின் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால், போதிய வருமானம் இன்றி சிரமப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுலகிருஷ்ணன் புத்தாண்டு அன்று மனைவியுடன் போனில் பேசியுள்ளார். அப்போது மனைவி சரிவர பேசாததால் மனம் உடைந்த கோகுலகிருஷ்ணன் இன்று(02-01-2025) காலை இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து புறப்பட்டார். பின்னர் அவர் திருச்சி- சென்னை ரயில் வழித் தடத்தில் திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் உத்தமர் கோவில் அருகே அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருச்சி ஜங்ஷன் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோகுலகிருஷ்ணனின் தாயார் சூரியகலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்