திருச்சி, வயலூர் ரோடு குமரன் நகர் 12வது தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 59).இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், கடையை பூட்டி விட்டு பெரியசாமி வீட்டுக்கு சென்று விட்டார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மளிகை கடையின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டது.இதனைப் பார்த்து அதிர்ச்சிடைந்த பெரியசாமி, கடைக்கு வருவதற்குள் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம ஆசாமி ஒருவன், கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கடையின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 25ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்று ஓடிவிட்டான்.இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சிடைந்த பெரியசாமி, அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை திருடிய ஹெல்மெட் ஆசாமியை தேடி வருகின்றனர்.
Comments are closed.