விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மருந்து உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு தீ பற்றியது. இந்த தீ அடுத்தடுத்த கட்டிடங்களில் பரவியதை அடுத்து வெடிகள் வெடித்து சிதறியதில் 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.