பறவைக்காய்ச்சல் பரவல்: ஹாஃப் பாயில் சாப்பிடலாமா?…* சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சொல்வதென்ன..?
சென்னையில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பரிசோதனை செய்ததில் பறவைக்காய்ச்சல் தாக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே விரைவாக பரவக்கூடியது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது. தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. பறவை காய்ச்சல் தொடர்பாக சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும். இறந்த கோழியை உண்ண வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.