கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞா் பிரபாகரன் பியூட்டிசனாக உள்ளாா். இவருக்கு பெற்றோா்கள் இல்லாததால் மேன்சன் ஒன்றில் தங்கி வேலைபாா்த்து வருகிறாா்.பைக்குகள் மீது அதீத ஆசை கொண்ட இவா் விலை உயா்ந்த பைக் வாங்கவேண்டும் என்று கடந்த 5 வருடங்களாக சிறுக சிறுக பணம் சோ்த்து ஒரே தவணையாக 2.17 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி YAMAHA R15 மாடல் பைக்கை வாங்கியுள்ளாா். இரண்டு மாதங்களுக்கு முன் வாங்கிய தன் பைக்கை வேலைக்கு சென்று திரும்பியதும் இரவு மேன்சென் முன் நிறுத்தியுள்ளாா். காலையில் வந்து பாா்த்தபோது வண்டி காணாமல் போனதை கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். இதனை தொடா்ந்து சிங்காநல்லுாா் காவல்துறையில் புகாா் அளித்துள்ளாா்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினா் சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்திவருகின்றனர். இரண்டு மர்ம நபர்கள் பிரபாகரனின் விலை உயர்ந்த பைக்கை திருடிச்செல்லும் காட்சிகள் அந்த சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.