திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தேர்வுகளுக்கான தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் சு.சீனிவாசராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நவம்பர் 2023 பருவத் தேர்வுகள் டிசம்பர் 11 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க இயலாத சில நிர்வாக காரணங்களால் இத்தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகள் மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.