திருச்சி ஏர்போர்ட்டுக்கு 10 லட்சரூபாய் செலவில் பேட்டரி கார்…- அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வழங்கியதை அவரது மனைவி ஜனனி தொடங்கி வைத்தார் (வீடியோ இணைப்பு)
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சொந்த செலவில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேட்டரி வாகனத்தை வழங்கியுள்ளார்.
அதனை விமான பயணிகளின் பயன்பாட்டிற்காக அவரது மனைவி ஜனனிமகேஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் விமானநிலைய இயக்குனர் ஞானேஸ்வரா ராவ், மேலாளர் சுனிதா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.