Rock Fort Times
Online News

தமிழகத்தில் புகையிலை பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீடிப்பு…!

தமிழகத்தில் குட்கா, புகையிலை, பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புகையிலை அடிப்படையிலான பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இது நடைமுறையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தத் தடையானது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், குட்கா, புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த மே 23-ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு(2026 மே 23 ஆம் தேதி வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்