திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை ,மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.. பின்பு தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தொழிலாளருக்கு துண்டு பிரசாரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
