Rock Fort Times
Online News

பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவா்களிடையே வாக்குவாதம்…. 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஒரு சில கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் மற்றொரு கிராமத்தை சேர்ந்த மாணவர்களும் கிண்டல், கேலி செய்து  வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதும், இந்த மோதலானது காரணங்கள் இல்லாமல் தொடர்ந்து மாலை நேரத்தில் பள்ளி முடிந்தபின் மண்ணச்சநல்லூரில் உள்ள திருப்பைஞ்ஞீலீ பேருந்து நிறுத்ததில் தினந்தோறும் நடைபெறுவதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் மண்ணச்சநல்லூர் கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பெரும் பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை கண்டித்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெற்றால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி மாணவர்களின் கூட்டத்தை கலைத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். இதையடுத்து இந்த மோதல் விபரீதமாக மாறாமல் இருக்க காலை,மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் செல்லும் வரை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளருக்கு, பொதுமக்கள், மண்ணச்சநல்லூர் கடைவீதி கடைக்காரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்