Rock Fort Times
Online News

தமிழகத்திற்கு குண்டு மிரட்டல்விடுத்த முன்னாள் கர்னலுக்கு முன்ஜாமீன் !

தமிழ்நாட்டில் குண்டு வைப்போம் என்று மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரர் கர்னல்,நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கிருஷ்ணகிரி ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, சென்னையில் பாஜக, சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் என்பவர் தமிழ்நாட்டு அரசுக்கும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியனார். ராணுவத்தில் குண்டு வைக்கவும், துப்பாக்கி சுடவும் எங்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார்கள். இதை தமிழகத்தில் செய்ய வைத்துவிடாதீர்கள் என்று கூறினார்.இது தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் முன்ஜாமீன் கேட்டு கர்னல் பாண்டியன் மனு தக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், இதுபோல மிரட்டல் விடுக்கும் வகையில் இனிமேல் பேசமாட்டேன் எனவும் அதற்கு மன்னிப்பும் கேட்பதாக குறிப்பிட்டு இருந்தார். நிபந்தனையற்ற மன்னி ப்பு கேட்கப்பட்டதால், திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் ஒரு வாரம் கையெழுத்துபோட வேண்டும் என்று நிபந்தனை அடிப்படையில் முன்ஜாமின் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்