Rock Fort Times
Online News

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு ரெய்டு -தென்னூர் மின்வாரிய அலுவலகமும் தப்பவில்லை.

திருச்சி தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.13,700 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் புள்ளம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி விசாரணை நடத்தப்பட்டது. மின்வாரிய அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதன்படி திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள பாலக்கரை, மலைக்கோட்டை, மகாலெட்சுமிநகர் ஆகிய பிரிவுக்குட்பட்ட உதவி மின்பொறியாளர் அலுவலகங்களில் நேற்று மாலை 5 மணி முதல் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். காவல்ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த சோதனையில் அந்த அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.13,700 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி மின்பொறியாளர்கள் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்..

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்