Rock Fort Times
Online News

குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு!

குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ பணிகளுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ முதல் நிலை தேர்வு ஜூன் 15-ல் நடைபெறும். துணை கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 8 முக்கிய பதவிகளுக்கும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று குரூப் 1 ஏ தேர்வுக்கு மொத்தம் 2 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இந்த மாதம் இறுதி வரை (ஏப்ரல் 30) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in / www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்