திருச்சி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் 29.11.2025 (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்சாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணாநகர், குத்பிஷா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கே.எம்.சி. மருத்துவமனை பகுதி, புத்தூர், அருணா தியேட்டர் பகுதி, கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா, மீனா தியேட்டர் பகுதி, கோர்ட் பகுதி, அரசு பொதுமருத்துவமனை பகுதி, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில் பகுதி, கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.