பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி சிட்டி பகுதியில் நாளை (20.09.2025) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இது தொடர்பாக திருச்சி மன்னார்புரம் கிழக்கு செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார்புரம், டி.வி.எஸ்.டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.ஹெச் காலனி, உஸ்மான்அலி தெரு, சேதுராமன்பிள்ளைகாலனி, ராமகிருஷ்ணாநகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, கேசவநகர். காஜாநகர், ஜே.கே.நகர், ஆர்.வி.எஸ்.நகர், சுப்பிரமணியபுரம், ராஜாதெரு, அண்ணாநகர், ரஞ்சிதபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்திய சிறைச்சாலை, கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, முல்லைநகர், செங்குளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காரோடு, (கலெக்டர் பங்களா) ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Comments are closed.