சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அடையாளம் தெரியாத பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. நீல நிற சேலை அணிந்தபடி புதரின் உள்ளே உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலை மீட்டு சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும் என கூறப்படுகிறது. அவர் யார்? எதற்காக அங்கு வந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? அல்லது விபத்தில் உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் விபச்சாரங்கள் நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த அக்டோபர் 30ம் தேதி 2 ஆண் சடலங்கள் சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ஒரு பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.