அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஹோட்டலில் அமமுக அவைத் தலைவர் கோபால் தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் இன்று நடந்தது. இந்த செயற்குழு கூட்டத்தில் அமமுக துணைப் பொதுச் செயலாளர்கள் ரெங்கசாமி, செந்தமிழன், சண்முகவேல், மாணிக்கராஜா, தலைமை நிலைய செயலாளர்கள் ராஜசேகரன், மகேந்திரன், பொருளாளர் எஸ்.கே செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், தேர்தல் பிரிவு செயலாளர்கள் பார்த்திபன், குமரேசன் உள்ளிட்ட கழக அமைப்புச் செயலாளர்கள், 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்று பேசினாா். மேலும் இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், தெற்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் , நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, ராஜராமநாதன், வக்கீல் சரவணன், லதா,தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் டோல்கேட் கதிரவன்,
கமரூதீன், பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவகுமார், கல்நாயக் சதிஷ், வேதாத்திரி நகர் பாலு, மதியழகன், சிறுபான்மை பிரிவு பக்ருதீன், இளையராஜா,மற்றும் உமாபதி, நல்லம்மாள், சக்திவேல்,தருண், மனோஜ்குமார், கார்த்திகேயன், சாந்தா, உறையூர் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதித்து, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.