அம்பேத்காின் 67வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவ சிலைக்கு திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் போட்டோ கமால், இளங்கோ ,வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, மோகன் தாஸ், மாமன்ற உறுப்பினர்கள் முத்துசெல்வம், ராமதாஸ, புஷ்பராஜ், கலைச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.