தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மே 1-ம் தேதி மூடப்படும்…- திருச்சி கலெக்டர் பிரதீப்குமார்..!
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மே 1-ம் தேதி (வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படுவதுடன், அதனுடன் இணைந்து இயங்கும் பார்கள் மற்றும் ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை நடைபெறாது. அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Comments are closed.