Rock Fort Times
Online News

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்…!

அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 3 இடங்களில் அதிமுக சார்பில் இன்று(22-04-2025) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில்  ஒத்தக்கடை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசிமா பாரிக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் அய்யப்பன், இணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், இளைஞர் அணி ரஜினிகாந்த், வழக்கறிஞர் அணி ராஜேந்திரன், இலக்கிய அணி பாலாஜி, எம்ஜிஆர் மன்றம் வெல்லமண்டி சண்முகம், ஐ.டி.பிரிவு வெங்கட்பிரபு, ராஜேந்திரன், சகாபுதீன், ஜான் எட்வர்ட் இலியாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள், ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் சிந்தாமணி முத்துக்குமார், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் இன்ஜினியர் இப்ராம்ஷா, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், கலைப் பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர். முஸ்தபா, என்.எஸ். பூபதி, ஏர்போர்ட் விஜி, வாசுதேவன், கலீல் ரகுமான், புத்தூர் ராஜேந்திரன், நாகநாதர் பாண்டி, ரோஜர், கலைவாணன், வழக்கறிஞர்கள் சசிகுமார், முல்லை சுரேஷ், முத்துமாரி, ஜெயராமன், தினேஷ் பாபு , கங்கைமணி, கௌசல்யா, ஜெயஸ்ரீ, மகளிர் அணி தீபா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், நிர்வாகிகள் மார்க்கெட் பிரகாஷ், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, ரமணிலால், தலைமை கழக பேச்சாளர் ஆரி, செபா, பாலக்கரை ரவீந்திரன், சக்திவேல், குருமூர்த்தி, ஜங்ஷன் பூக்கடை முத்துக்குமார், புத்தூர் பாலு, தென்னூர் ஷாஜகான், வாழைக்காய் மண்டி சுரேஷ், எனர்ஜி. அப்துல்ரகுமான், கேபி.ராமநாதன், வக்கீல்கள் சுரேஷ், வடிவேல், சாமி மற்றும் அரப்ஷா, புதூர் வசந்தகுமார், சிங்காரவேலன், கே.டி.அன்புரோஸ், நத்தர்ஷா, இலியாஸ், அப்பாக்குட்டி, என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், வசந்தம் செல்வமணி, ஆனந்த், கிராப்பட்டி கமலஹாசன், தர்கா காஜா, கே.டி.ஏ.ஆனந்தராஜ், கமால் முஸ்தபா, எடத்தெருபாபு, சிராஜுதீன், ஜெயக்குமார், ரபீக், ராஜ்மோகன், என்.டி.மலையப்பன்,வெல்லமண்டி கன்னியப்பன், பீமநகர் சீனிவாசன், கீழக்கரை முஸ்தபா, கல்லுக்குழி முருகன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், மற்றும் முத்தையா, அரவானூர் பன்னீர்செல்வம், காசிபாளையம் சுரேஷ்குமார், சிங்கமுத்து, ஈஸ்வரன், கதிர்வேல், குமார், பொம்மாசி பாலமுத்து, தேவா, வெஸ்லி குருமூர்த்தி, ஆசைத்தம்பி, வண்ணாரபேட்டை ராஜன், உடையான்பட்டி செல்வம், டைமன் தாமோதரன், ஐ.டி.நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்

இதேபோல, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பெட்டவாய்த்தலையில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, பூனாட்சி, அமைப்பு செயலாளர்கள் மனோகரன், வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், இந்திரா காந்தி, பரமேஸ்வரி, அவைத்தலைவர் சமயபுரம் ராமு, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அறிவழகன் விஜய், மீனவர் அணி மாவட்ட செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ரமேஷ், இலக்கிய அணி மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மாணவரணி மாவட்ட செயலாளர் அறிவழகன், இளைஞர் அணி நிர்வாகிகள் தேவா, புங்கனூர் கார்த்திக்,
வழக்கறிஞர் அணி வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி முத்து கருப்பன், ஆதாளி, கோப்பு நடராஜ், இன்ஜினியர் ஜெயக்குமார்,
அழகாபுரி செல்வராஜ், டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜ், இளைஞர்- இளம்பெண்கள் பாசறை செயலாளர் சோனா விவேக், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் திருப்புகழ் செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி கே.வி.ரகுபதி, அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் பூக்கடை பி.எம்.கதிர்வேல், திருச்சி மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் சிறுகமணி கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ், சிறுகமணி பேரூர் கழகச் செயலாளர் கே.வி.செந்தில்குமார், அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கடிகை ராஜகோபால், எஸ்.எஸ்.முத்தையா,சாத்தனூர் வாசு, கேசவன், இ.பி.ஏகாம்பரம், சமயபுரம் ராஜேந்திரன், துறையூர் பிரகாஷ், கவிதை மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி புறநகர்தெற்கு மாவட்டம்

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புள்ளம்பாடியில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, பேரூர் கழகச் செயலாளர் ஜேக்கப், ஒன்றிய செயலாளர்கள் டி.என்.சிவக்குமார், எஸ்.கே.டி.கார்த்திக், ராவணன், அசோகன், நகரச் செயலாளர் எஸ்.பி.பாண்டியன், கூத்தைபார் முத்துக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சூரியூர் ராஜா என்கிற ராஜ மணிகண்டன், பாசறை அருண் நேரு, மாணவர் அணி வக்கீல் அழகர்சாமி, வக்கீல் முருகன், ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் அனுசுயா ரவிசங்கர், பகுதிச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயா, சாந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்