அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ( 18.09.2023 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து பாஜக மேலிடத்தில் புகாரளித்துள்ளோம். பலமுறை எச்சரித்தும் அண்ணாமலை அலட்சியப்படுத்துகிறார். பாஜகவுடன் தற்போது அதிமுக கூட்டணியில் இல்லை. இதுதான் அதிமுக நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அதிமுகவுக்கு இழப்பு ஏதும் இல்லை. தனித்து நின்றால் நோட்டாவை கூட தாண்ட முடியாதவர் அண்ணாமலை. அதிமுகவுக்குள் குழப்பம் இல்லை. தேர்தல் வரும்போது தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.