வையம்பட்டி அரசு ஐ.டி.ஐ-யில் மாணவர் சேர்க்கை…!- விண்ணப்பித்து பயனடைய திருச்சி மாவட்ட கலெக்டர் அழைப்பு…
தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக மணப்பாறை அடுத்துள்ள வையம்பட்டியில் அரசு ஐ.டி.ஐ செயல்பட்டு வருகிறது. இங்கு இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 8, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் ஜாதி சான்றிதழ், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றுடன் நேரில் வந்து அட்மிஷன் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த மேலும் விபரங்களை பெற விரும்பினால் 80729 65487 மற்றும் 94436 44967 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.