Rock Fort Times
Online News

அடேங்கப்பா… மலைக்க வைக்கும் சாதனை- கோவில் திருவிழாவையொட்டி ரூ.90 லட்சத்திற்கு மது விற்பனை…! பெருமளவில் முறைகேடு நடந்திருப்பதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் பொன்னர்- சங்கர் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. 4 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது, பல்லாயிரக்கணக்கில் இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் இப்பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையில் கூடுதல் கவுண்டர்கள் அமைத்து 3 நாட்கள் கூடுதலாக மது விற்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்து வருகிறது.  இந்த ஆண்டும் மார்ச் 5 -ந் தேதி தொடங்கிய திருவிழாவையொட்டிஅப்பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையில் 4 கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு சிறப்பு விற்பனை நடைபெற்றது. இதில் சுமார் ரூ. 90 லட்சம் வரை மது விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. ரூ.140 க்கு விற்பனையாகும் மதுவகைகள் ரூ.200 க்கும், ரூ.240க்கு விற்பனையாவது ரூ. 300 க்கும் விற்கப் பட்டதாகவும், அவற்றின் விலைகள் ஸ்கேன் செய்யாமல் விற்பனை செய்யப்பட்டதாகவும் மது பிரியர்கள் தெரிவிக்கின்றனர். கள்ளச்சந்தையில் விற்பது போல அநியாய விலைக்கு மதுவகைகள் விற்கப்பட்டதால் வேறு வழியின்றி கேட்ட தொகையை கொடுத்து மது பிரியர்கள் புலம்பியபடி வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் நிர்வாகம் சிறப்பு விற்பனைக்கான விதிமுறைகளை வகுத்தும் அதன்படி நடக்காமல் விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள், அரசியல் பிரமுகர்களின் உதவியுடன் முறைகேடுகள் செய்து இரு நாட்களில் பல லட்சம் லாபம் சம்பாதித் துள்ளதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த முறைகேடு குறித்து டாஸ்மார்க் மேலதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
               ADVERTISEMENT…👇

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்