திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில்,
திருச்சி – ஸ்ரீகங்கா நகர் ஹம்சபர் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22498) திருச்சியில் இருந்து காலை 4.45 மணிக்கு புறப்படும் ரயிலில் ஜனவரி
10- ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன (ஏ.சி)பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்கத்தில் ஸ்ரீகங்கா நகரிலிருந்து பகல் 1.55 மணிக்கு புறப்படும் ஸ்ரீ கங்காநகர் – திருச்சி ஹம்சபர் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்: 22497) ஜனவரி 6-ம் தேதி முதல் 27- ம் தேதி வரை கூடுதலாக ஒரு குளிர்சாதன (ஏ.சி) பெட்டியுடன் இயங்கும். இதேபோல் திருச்சியில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் திருச்சி – ஜோத்பூர் ஹம்சபர் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்: 20482) ஜனவரி 4 ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில், ஜோத்பூரிலிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும் ஜோத்பூர் – திருச்சி ஹம்சபர் அதிவிரைவு ரயிலில் (வண்டி எண்: 20481) ஜனவரி 1ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியுடன் இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.