தமிழ்நாட்டில், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யை கண்ட அனைவரும் அரங்கம் அதிர கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். பின்னர், மாணவ- மாணவிகளிடம் விஜய் பேசினார். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது பிளஸ்-2 பொதுத் தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசாக வழங்கினார். அதனை மாணவியின் தாயாரிடம் கொடுத்து அணிவிக்க செய்தார். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.