திருச்சி, ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு ரேஷன் கடை அருகே 2 வாலிபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன் இரண்டு பேரையும் சுற்றி வளைத்தார். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்றொருவர் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போது, திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்த ராம்குமார் (22) என்பது தெரியவந்தது. அவரை சோதனையிட்ட போது கத்தி ஒன்று மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், அவரை கைது செய்த போலீசார் அவரது கூட்டாளி விமல்ராஜ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.