Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் அருகே தேசிய நெடுஞ் சாலையோரம் பிணமாக கிடந்த வாலிபர்…! * யார் அவர்? போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம், சமயபுரம் பனமங்கலம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலம் கிடப்பதாக கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார், சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்