Rock Fort Times
Online News

திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பறக்க இருந்த பெண் சிக்கினார்…!

திருச்சியில் இருந்து சென்னை செல்ல தனியார் விமானம் ஒன்று இன்று (ஜூன் 23) தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெண் ஒருவரின் உடைமையில் ஜிபிஎஸ் கருவி இருந்தது. விமானத்தில் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்ல தடை உள்ளதால் அந்த கருவியை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விமான நிலையத்திற்கு வந்த காவல் துறையினர் இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்