அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு மாநிலங்களவை எம்.பி.க்கான சீட்டு ஒதுக்கப்படாதது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற ஜூன் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறும் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணி மற்றும் கட்சி சார்ந்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் என பல விஷயங்கள் குறித்த தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
Comments are closed.