டெல்லியின் அலிபூர் சந்தைப் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று(15-02-2024) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கு ரசாயனங்கள் நிறைந்து இருந்ததால் தீ வேகமாக பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் பற்றி எரிந்த தீயால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 20 தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பயங்கர தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.