நூறுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற வாலிபருக்கு மற்றொரு வழக்கில் 3 ஆண்டு சிறை…!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வாலிபர் காசி. இவர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக நூறுக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி அவர்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வந்தார். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் கடந்த 2020 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் சிறையில் இருக்கும் காசியும், அவரது தந்தையும் கந்துவட்டியில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. காசியும், அவரது தந்தை தங்கபாண்டியனும் வட்டிக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்து 5 லட்சம் வாங்கியதாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று(04-01-2025) தீர்ப்பு கூறப்பட்டது. கந்து வட்டி வழக்கில் காசிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டு சிறையும், இதில் இடைத்தரகராக இருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம், பாலியல் வன்கொடுமை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள காசி மீண்டும் 3 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.
Comments are closed.